Saturday, 10 May 2008

தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்-virakesari

 வெள்ளவத்தையில் வைத்து தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை கடத்தப் பட்டுள்ளார்.கடத்தப்பட்ட இளைஞர் செல்வகுமார் செல்வதுறை (வயது 23) என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தையில் வசிக்கும் தனது தாயாரை சந்திக்க சென்ற வேளை இவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உறவினர்களால் கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: