Thursday, 3 July 2008

வவுனியாவில் இளைஞன் சுட்டுக்கொலை

வவுனியாவில் இனம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் வவுனியா மாறம்பைக்குளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்வர் மாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எஸ்.யோகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது உடலம் உடற்கூறு ஆய்வுக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: