Friday, 25 July 2008

த.தே.கூட்டமைப்பு இல்லாத சர்வகட்சிப் பேரவை நடவடிக்கைகள் பயனற்றது – ரொபர்ட் எவன்ஸ்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு அற்ற சர்வகட்சிப் பேரவையின் நடவடிக்கைகள் பயனற்றதென ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

17 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதன் மூலம் இந்நாட்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் கிடைக்குமா என்பது பற்றி உறுதிபடக் குறிப்பிட முடியாதென ஏனைய ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: