Thursday, 3 July 2008

அம்பாறையில் இரு பொதுமகன் மீது பிள்ளையான் குழுவினர் துப்பாக்கிச் சூடு

அம்பாறையில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் இரு பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.


இதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை 3.30 மணியளவில் கல்முனை நீலாவணைப் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த நடராசா ராஜ்மோகன் (48 வயது), சேனைக்குடியிருப்பு, மாரியம்மன் வீதியைச் சேர்ந்த ஆனந்தராசா தங்கத்துரை (21வயது) ஆகிய இருவருமே காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: