Friday, 18 July 2008

நவநீதம்பிள்ளை ஐநாவின் மனிதஉரிமைகளுக்கான தலைமை பதவியில்?

தென்னாபிரிக்காவில் நீதிபதியாகவும் 2003 ம் ஆண்டு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் பணியாற்றியவருமான நவநீதம்பிள்ளை ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான தலைவர்பதவி வகிப்பதற்கு பான் கீ மூன் அவர்களிடம் முன்மொழியப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இவர் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் எட்டுவருடங்களுக்கு மேலாக கடமையாற்றியவர் என்பதுவும் றுவாண்டாவில் நிகழ்ந்த மனிதப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இவர் மேற்கொண்ட தீர்ப்புக்கள் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிள்ளை அவர்கள் தென்ஆபிரிக்காவை சேர்ந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதுவும் ஹவாட் பல்கலைக்கழகத்தில் 1982 ம் ஆண்டு டொக்ரர் பட்டம் பெற்றவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இவர் 1941 ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

No comments: