Friday, 23 May 2008

(2ம் இணைப்பு)முறிகண்டியில் சிறிலங்காப் படை நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் படுகொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 16 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியைச் சேர்ந்த மக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தினர்.

ஹையஸ் ஊர்தியில் மக்கள் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.





















முறிகண்டி கோவிலில் இருந்து அக்கராயன் வீதியில் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா பயங்கரவாத அரசு திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்யும் வகையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.



No comments: