
மன்னாரில் சிறிலங்காப் படையினர்
மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 6 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
(2 ஆம் இணைப்பு: பலியான, காயமடைந்த படையினரினதும், கைப்பற்றப்பட்ட உடலங்களினதும் ஆயுதங்களினதும் எண்ணிக்கை)
மன்னார் கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 6 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் படையினரிடம் இருந்து
ஆர்பிஜிகள் - 02
ஆர்பிஜி எறிகணைகள் - 08
ஆர்பிஜி புரப்பலர்கள் - 08
ரி-56 ரக துப்பாக்கிகள் - 05
ரவைக்கூடுகள் - 61
குண்டுகள் - 48
நடுத்தர ரவைகள் - 6,985
நடுத்தர ரவைகள் இணைப்பிகளுடன் - 230
பிகே சுடுகுழல் - 02
பிகே ரவைகள் இணைப்பிகளுடன் - 1,885
பிகே ரவைகள் - 228
கிளைமோர் - 01
ரவைத்தடுப்பு அணிகள் - 10
தலைக்கவசங்கள் - 08
சப்பாத்துக்கள் - 17 சோடிகள்
பைகள் - 18
கொமாண்டோ குடிநீர் கொள்கலன் - 31
உரைப்பை - 150
என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், நெடுங்கண்டல்குள அணையால் முன்னேறும் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.














No comments:
Post a Comment