Sunday, 18 May 2008

இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிதது செல்கின்றது மண்டபத்தில் இருந்து 260 அகதிகள் சேலத்திற்கு மாற்றம்

தமிழகம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 260 பேர் சேலம் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து நாளாந்தம் ஏற்பட்டுவரும் புலப்பெயர்வை அடுத்து மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிதது செல்கின்றது. இதனைத் தொடர்ந்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. இதனால் 77 குடும்பத்தை சேர்ந்த 260 பேர் சேலம் முகாமிற்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர். இதேவேளை மண்டபம் முகாமில் இருந்து கூலிவேலைக்கு சென்ற முத்து என்பவர் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலியானார் ஒருவர் காயமடைந்தார்.

No comments: