Monday, 5 May 2008

இலங்கையிலிருந்து 40 அகதிகள் இன்று தனுஷ்கோடி வருகை

இலங்கையிலிருந்து 40 அகதிகள் இன்று தனுஷ்கோடி கரையைச் சென்றடைந்துள்ளனர். இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து வரும் உக்கிர மோதல்களையடுத்து படகுகள் மூலம் தமிழகத்திற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று தனுஷ்கோடி அருகேயுள்ள முகுந்தராயர் சத்திரத்திற்கு 40 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். இவர்களிடம் தனுஷ்கோடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: