Thursday 1 May 2008

கட்டுப்பாடுகள் இன்றி ஊடகத்துறை செயற்பட வேண்டும்: றணில்:

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவின் ஆட்சிக்காலத்தில் கூட ஊடகசுதந்திரம் பேணப்பட்டதாக ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட றணசிங்க பிரேமதாஸாவின் 12 ஆவது சிரார்த்த தினத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஊடகத்துறை தனக்குரிய முழமையான சுதந்திரத்துடன் செயற்பட வேண்டும். வன்முறைப் பிரயோகம் அற்ற, கட்டுப்பாடுகள் இன்றிய சுதந்திரத்தை ஊடகம் அனுபவிக்க வேண்டும் எனக் கூறினார். ஆத்தகைய சுதந்திரம் பிரேமதாஸாவின் ஆட்சியிலும் பேணப்பட்டதாக சுட்டிக் காட்டினார்.

No comments: