Saturday, 24 May 2008

ஜே.வி.பி.யில் தலைவர்-மத்திய குழு உறுப்பினர்கள் அதிரடி மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27.05.08) நடைபெறவுள்ள ஜே.வி.பி.யின் 5 ஆவது தேசிய மாநாட்டின் போது அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய மத்திய குழு, புதிய நிர்வாகக் குழு ஆகியன நியமிக்கப்படவுள்ளன.

அம் மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டில் பங்கேற்குமாறு விமல் வீரவன்ச மற்றும் அவருடன் இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் பத்திரிகை அறிவித்தல்களுடன் அவர்கள் சிலர் வழங்கியிருக்கும் முகவரிகளுக்கு பதிவுத் தபாலில் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விமல் வீரவன்ச உட்பட கட்சியை விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் மத்திய குழுவில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: