Sunday, 18 May 2008

கிழக்கின் முதலமைச்சர் டாக்டர் எம்.பி.பி.எஷ் பிள்ளையான் மகாநாயக்க தேரர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்!!!

கிழக்கின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரியா மஹாநாயக்க தேரர்களை இன்று பிற்பகல் 2.00 மணியளவில் (வைகாசி 18) சந்தித்து, ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தலதா மாளிகைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, அபிவிருத்தியை ஆரம்பிக்க போவதாக பிள்ளையான் நாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின் மலையகத் தலைநகரில் இருந்து நீங்க முன் கிஷ்வுல்லாவிற்கு தொலைபேசியளைப்பை மேற்கொண்டு தன்னுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து கிழக்கை அபிவிரித்து செய்ய ஒத்துளைப்பை வளங்குமாறும் கேட்டுக்கொண்டார்!!!

source:lankadissent and global tamil news

No comments: