Wednesday, 21 May 2008

அமைச்சர் மேர்வின் சில்வாவின் அடியாட்டிகள் மீண்டும் சிரச ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

கிரிபத்கொடையில் நடைபெற்ற வெசாக் விழாவொன்றை படமெடுக்கச் சென்ற சிரச ஊடகவியலாளர்கள் மீது தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிரிபத்கொட பொலிஸில் முறைப்பாடு குறித்த ஊடகவியலாளர்கள் செய்துள்ளனர்.

கடந்த 19ம் திகதி கிரிபத்கொட பிரதேசத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பகுதியில் நீங்கள் வரக்கூடாதென மிரட்டி அச்சுறுத்தியதாக குறிப்பிடுகின்றனர்.

சிரச ஊடகவியலாளர்கள் பயணித்த வாகன சாரதியைத் தாக்கி மற்றும் வீடியோ கமராவை உடைத்தெறிந்ததாகத் தெரியவருகிறது.

எனினும், பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

No comments: