Sunday 15 June 2008

புதுக்குடியிருப்பில் வான் குண்டுத்தாக்குதல்: 2 பேர் பலி- 11 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு நகர மையத்தில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளடங்கலான பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் குண்டுத்தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் பாடசாலைக் கட்டடங்கள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

செந்தூர்முருகன், கோபால், பத்மநாதன் ஆகியோரின் வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.

சுதாகரன், சிவா, அன்ரன் நிக்சன், சந்திரகுமார்ஆகியோரின் வீடுகள் சேதமாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

இதில் விசுவமடு புன்னைநீராவியடியைச் சேர்ந்த

நாகதம்பிராசா (வயது 20)

ஐயாத்துரை சுந்தரலிங்கம் (வயது 47)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

6 பிள்ளைகளின் தந்தையான 1 ஆம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தங்கரசா

5 பிள்ளைகளின் தந்தையான வேணாவிலைச் சேர்ந்த அசோகன்

9 பிள்ளைகளின் தந்தையான வேணாவிலைச் சேர்ந்த பத்மநாதன் (வயது 76)

ஒரு பிள்ளையின் தாயான முதலாம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயமோகினி (வயது 32)

முதலாம் ஆம் வட்டராம் புதுக்குடியிருப்பைச்சேர்ந்த கலைத்தேவன் (வயது 36)

கற்சிலைமடுவைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 58)

2 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச்சேர்ந்த தினேஸ் (வயது 18)

10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சந்திரன் (வயது 52)

இரணைப்பாலை 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பார்புகழன் (வயது 27)

இரணைப்பாலையைச் சேர்ந்த விநோதன்

விசுவமடுவைச் சேர்ந்த பானுஜன்

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

puthinam.com

No comments: