Monday 30 June 2008

சமையல் எரிவாயுவின் விலை இன்றிரவு உயரும்?

சமையல் எரிவாயுவின் விலைத்திருத்தம் குறித்து இன்று திங்கட்கிழமை மாலை இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் றூமி மர்சூக் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலைத்திருத்தத்திற்கென முன்வைத்த கோரிக்கைகளின் பிரகாரமாகவே, இந்த விலைதிருத்தம் அறிவிக்கப்படவிருப்பதாகத் தெரிவித்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, சமையல் எரிவாயுவிற்கான புதிய விலைத்திருத்தம் இன்று நள்ளிரவு வெளியிடப்படுமென தெரிவித்துள்ளது.

ஷெல் எரிவாயு நிறுவனம் தற்போது 12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றை 1,729 ரூபாவுக்கு விற்பனை செய்து வரும் நிலையில், அதன் விலையை மேலும் 324 ரூபாவால் அதிகரிக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை லாப் எரிவாயு நிறுவனமும், விலைத்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது

No comments: