Friday 13 June 2008

அக்கரைப்பற்று காவல்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் விபச்சாரத் தொழில் முன்னெடுப்பு

அம்பாறை அக்கரைப்பற்று காவல்நிலையப் பொறுப்பதிகாரி முஹமட் இஷாட் (O.I.C சொந்த இடம் கொழும்பு இரு வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் கடமையாற்றுகின்றார்) உதவியுடன் விபச்சார தொழில் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொத்துவில், வாங்காமம், ஆலங்கேணி, போன்ற பின்தங்கிய பகுதியில் உள்ள முஸ்ஸிம் யுவதிகளும் , கோமாரி, விநாயகபுரம், போன்ற பகுதி தமிழ் யுவதிகளையும் இத்தொழிலுக்கு ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளுக்கு கையூட்டாகப் பணமும் பெண்களையும் கொடுத்து விபச்சாரத் தொழிலை அக்கரைப்பற்று நகரில் முதன்மை இடத்தைப் பெறும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மேற்கொண்டுவருகின்றது. அத்துடன் இக்காவல்துறை அதிகாரி, மற்றும் இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் அரசாங்க கட்சியில் அமைச்சராக உள்ள அதாவூல்லாவின் ஆதரவாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கரைப்பற்று நகரில் அமைந்துள்ள S P.T.M Gold House Group கம்பனியின் உரிமையாளர் மஞ்சூர், விக்டோரிய வர்த்தக நிலையம், ரி.வி. ஆஜியாரின் மகன், மற்றும் அக்கரைப்பற்று ஒமேக்கா விடுதிக்கு அருகில் உள்ள கோழிக்கடை உரிமையாளரான ஒரு பெண் ஆகியோர் தமிழ் முஸ்ஸிம் இளம் யுவதிகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதற்கான முகவர்களாக செயல்பட்டுவருகின்றனர். இவ்வாறான தொழில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்துவருகின்றது. அத்துடன் இளம் யுவதிகளை வெளி மாவட்டங்களுக்கும் அழைத்து சென்று இத்தொழிலில் ஈடுபடுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவர்களின் வர்த்தக நிலையங்களுக்கு வரும் பெண்களை வியாபாரம் செய்வது போன்று கை பிடித்து பேசியும் இத்தொழிலில் கூடுதலான வருமானம் பெற்றுத்தருவதாக அவர்களிடம் தெரிவித்து வரவழைக்கின்றனர். இவர்கள் உயர் தொழில் புரியும் அதிகாரிகள் மற்றும் மதிப்பு மிக்க பிரமுவர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இத்தொழிலுக்கு பெண்களை கொடுக்கும் முகவராக தொழில்பட்ட ஒரு தமிழ்பெண் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது ஈ.பி.டி.பியில் இணைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments: