Thursday 12 June 2008

பிரபாகரனை உயிருடன் கைது செய்வதே தமது பிரதான நோக்கம் --சரத் பொன்சேகா


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்திருக்கும் முல்லைத்தீவு பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத் பொன்சேகா தினமினவிற்கு தெரிவித்துள்ளார்.

நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் தப்பியோட முடியாது தவிப்பதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 56, 57, 58 மற்றும் 59ம் படையணிகள் நான்கு புறங்களினூடாக முல்லைத்தீவை ஊடறுத்துள்ளதகாவும், இதற்கு மேலதிகமாக இரண்டு விசேட படையணிகள் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நேரடிக் கண்காணிப்பில் இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்திய படையினர் சுற்றி வளைத்த போது சிறிய முகாம்கள் பலவற்றைக் கொண்டமைந்த வான் போ பேஸ் முகாமில்தான் விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரன் மறைந்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து சுமார் 800 கிலோ மீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 21 கிலோ மீற்றரே எஞ்சியிருப்பதாகவும் இராணுவத் தளபதி தினமினவிற்கு குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் கைது செய்வதே தமது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

ttpian said...

Nobody can plug,even the hair of our leader-prabaharan!
Sarath fonseka will kick the bucket soon