Wednesday 11 June 2008

பதுளையில் சிங்கள காடையர்களால் வீட்டினுள் புகுந்து யுவதியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இரண்டு தமிழ் பெண்கள் கொலை!!!

பதுளை மடுல்சீமை ரோபரி தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு தமிழ் பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் திருமணம் செய்துக்கொள்ளவிருந்த யுவதியும் அவரின் தாயுமே சம்பவத்தின் போது கொல்லப்பட்டனர். மற்றும் சில ஆண்கள் இந்த சம்பவத்தின் போது காயமடைந்துள்ளனர்.

தோட்டத்தின் அருகில் உள்ள சிங்கள கிராமத்தில் இருந்து வந்த சுமார் 18 பேர் வரை குறித்த வீட்டினுள் புகுந்து யுவதியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னரே அவர்கொலை செய்யப்படடுள்ளார் இதனை தடுக்க முற்பட்ட அவரின் தாயும் சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவத்தை நேரில் கண்ட வீட்டில் உள்ள ஆண்கள் வெளியாரும் சம்பவத்தின் போது தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.

ஆண் ஒருவரின் நாக்கு வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.இந்த தோட்டத்தில் தமிழர்கள் குறைந்தளவிலேயே வாழ்வதால் அவர்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

No comments: