Saturday 14 June 2008

வவுனியா அகதி முகாமில் குடிநீர் தட்டுப்பாடு

வவுனியாவில் உள்ள இரண்டு அகதி முகாம்களில் வாழும் 1,600 பேர் குடிநீர் தட்டுப்பாட்டினால் அல்லலுறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் பாரிய குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரே பவுசரில்தான் குறித்த இரண்டு பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதி முகாம்களில் தங்கி வாழ்வோருக்காக குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவை பயன்பாட்டுக்கு உரிய நிலையில் காணப்படவில்லை எனத் தெரியவருகிறது.

No comments: