Saturday 14 June 2008

ஆள் அடையாளத்தை நிருபிக்க தவறிய மூன்று தமிழ் யுவதிகள் கைது

ஆள் அடையாளத்தை நிருபிக்க தவறிய மூன்று இளம் தமிழ் யுவதிகளை மாத்தறை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கடந்த 12ம் திகதி கைது செய்தனர்.

யுவதிகள் சிலர் மாத்றை நகரில் சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பையடுத்தே இந்த யுவதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரஸ்ஸ ஹீளந்தாவ தோட்டத்திலிருதந்து வசந்தாக கூறப்படும் இந்த யுவதிகளிடம். அடையாள அட்டைகளோ வேறு ஆவணங்களோ இருக்கவில்லையென்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்றை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பி.பி. ஆயுபாலவின் ஆலோசனையின் பேரில் மூன்று யுவதிகளையும் மாத்றை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments: