இலங்கை முன்னர் ஸிம்பாப்வேயிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஸிம்பாப்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு ஸிம்பாப்வே பாதுகாப்பு நிறுவனம்,
இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம்ஆண்டு லிபிய கப்பலில் ஸிம்பாப்வே இலங்கைக்கு அனுப்பிவைத்த 32 ஆயிரத்து 400 மோட்டர்கள், நடுக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை முகாபேயின் ஸிம்பாப்வே அரசாங்கம் இன்னமும் ஆபிரிக்க நாடுகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Monday 30 June 2008
ஸிம்பாப்வேயிடம் இருந்து இலங்கை முன்பு ஆயுதக் கொள்வனவு???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment