Tuesday 1 July 2008

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தரைச் முன்னர் சந்தித்துள்ளார்?

கிழக்கு பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட போது ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விடுதலைப் புலி தலைவர் ஒருவரை சந்தித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பூர் மற்றும் வாகரைப் பகுதிகளுக்கு குறித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் இரகசிய விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜே.வி.பி.யினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஜே.வி.பி. உறுப்பினர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: