Saturday 14 June 2008

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை மீது தற்கொலைத் தாக்குதல்; 1,100 கைதிகள் தப்பியோட்டம்

வடக்கு ஆப்கான் சிறைக் கட்டடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தலிபான் போராளிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அச்சிறையிலிருந்த 1,100 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதுடன், 15 சிறைக் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தப்பியோடியுள்ள சிறைக் கைதிகளில் இராணுவத்தினரும் அடங்குவதாக பிரதி நீதியமைச்சர் முகமட் காசீம் ஹாசிம்சாய் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாரின் பிரதான சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பாக, சரியான எண்ணிக்கையை கூற முடியாதுள்ளதுடன், எஞ்சியுள்ளவர்களை கணக்கிட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி சில நூறு கைதிகள் எஞ்சியுள்ளதாக அவர் கூறினார்.

மேற்படி தப்பியோடியவர்களை கைது செய்யும் பொருட்டு ஆப்கான் பாதுகாப்புப் படைகள் பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ஹாசிம்சாய் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: