Thursday 12 June 2008

தெஹிவளையில் அடையாளத்தை உறுதிப்படுத்திய போதும் 6 தமிழர்கள் கைது

தெஹிவளைப் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரால் 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை நள்ளிரவு இப்பகுதியில் தீடீரெனப் புகுந்த காவல்துறையினர் எதுவித காரணங்களின்றி இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தங்களது அடையாளங்களை உறுதி செய்தும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

இதேநேரம் நேற்றிரவு 9.30 மணியளவில் கெந்தலவத்தையில் வணிகர் ஒருவர் வெள்ளைச் சிற்றூர்திக் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார்.

No comments: