கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று இயங்கியது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் ஒருவரை கல்கிசை பொலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மேமாதம் 22ம் திகதி மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதியை பொலீசார் முற்றுகையிட்டபோது ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பெண்களை தலா 25ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல கல்கிசை நீதவான் அனுமதித்துள்ளார். பொலீசாரின் தேடுதலின்போது தப்பிச்சென்றவர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Wednesday 11 June 2008
வெள்ளவத்தை விபரச்சார விடுதி சுற்றிவளைப்பு தொடர்பில் அமைச்சரின் இணைப்புச்செயலர் கைது!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment