Monday 30 June 2008

500 இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளதாக த ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முதற் தடவையாக 500 க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலான படையினர் இந்தப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கலகத் தடுப்பு போரியல், காடுகளில் போரிடும் முறைமை, விசேட கடல்சார் பயிற்சி, தகவல், தகவல் வழிகாட்டி, நீர்மூழ்கி எpதிரத் தாக்குதல் முறைமை என பலதரப்பட்ட போரியல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

ttpian said...

India-do what ever u wish-But, no horn in the world can stop the formation of TAMILEELAM