Friday 13 June 2008

இலஞ்சம் வாங்கிய கிராம சேவையாளர் கைது

காலி பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரிடம் மூவாயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற கிராம சேவையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, சிறீசங்கமித்தபுரவிலுள்ள கிராமசேவகர் அலுவலகத்தில் வைத்தே நேற்றுக்காலை 9.35அளவில் இலஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கும்போது இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் பணிப்பாளர், சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். காலி, சிறீசங்கமித்தபுர 98வது பிரிவின் கிராம சேவையாளரான பீ.தீக்ஷன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments: