Saturday 14 June 2008

குடாநாட்டுக்கள் நுளைய புலிகள் தயாராகின்றனரா?-வீரகேசரி சுபத்திரா

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார்.

கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ்.

படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித் திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. தற்போது மேலதிக மாக 2.30 மணிநேரம் அதிகமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

யாழ். கடல்நீரேரியில் ஒரு வார காலத்துக்கு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட் டிருக்கிறது. படையினரின் வாகனத் தொடரணி கள் செல்லும் போது வெளிநாட்டு, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும், நபரும் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கடந்த வார நடுப்பகுதியில் இருந்து யாழ்.நகரிலும் குடாநாட்டின் முக்கிய இடங்களிலும் படையினர் அதிகளவில் நிறுத் தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடாநாட்டின் தென்புற கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பெருமளவில் படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலதிக படையினருடன் தென்கரையோரப் பகுதிகளுக்கு கனரக பீரங்கிகள், மோட்டார் கள், டாங்கிகளும் நகர்த்தப்பட்டிருக்கின்றன.

யாழ்.படைத்தளபதியின் இந்த அறிவிப்பும், திடீரென அதிகரிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப் பும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றத்தையும் பீதியையும் உருவாக்கியிருக் கின்றன. கடந்த வாரத்தில் தென்மராட்சிப் பகுதியில் தாழப்பறந்து வட்டமிட்டு, புலிக ளின் முன்னரங்க நிலைகளுக்கு அருகே "கிபிர்' விமானங்கள் தொடர்ந்து நடத்திய குண்டுத் தாக்குதல்கள், பூநகரிப் பிரதேசத்தின் மீது நடத் தப்படும் இரவு பகல் பாராத விமானம் மற்றும் ஷெல் தாக் குதல்கள் என்பன குடாநாட்டை போர்ப் பீதிக்குள் சிக்க வைத்திருக்கின்றன.

தென்கரையோரப் பகுதி ஊடாக யாழ். குடா நாட்டுக்குள் நுழையப்போவதாக புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஒரு செய்தி பரவி யுள் ளதையடுத்தே இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு களை படையினர் மேற்கொள்வதாக யாழ்.

படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல் சந்திரசிறி தெரிவித்திருக்கிறார்.

"விடுதலைப் புலிகளால் குடாநாட்டின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யாழ்.

நகருக்கு அண் மையில் உள்ள சிறுத்தீவில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ள னர். அவர்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது என்பதாலேயே குடா நாட்டின் பாதுகாப்பை இறுக்கத் திட்டமிட்டி ருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி வெளியான ஆங்கில பத்திரிகையொன்றுக்கு யாழ்.படைக ளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி அளித்த பேட்டியில், "குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. படையினர் உயர்ந்த பட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்ப தோடு புலிகளின் ஊடுருவலையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குடாநாடு எப்போதுமே புலி களின் முக்கிய இலக்காக இருக்கிறது. அதனால் அவர்கள் குடாநாட் டுக்குள் ஊடுருவ முயற் சித்துக் கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கு கடினமானது. ஏனெனில், இறுக்கமான பாதுகாப்பு நடைமுறையில் உள் ளது' என்று தெரிவித் திருந்தார்.

எனினும் ஒரு மாதத்துக்குப் பின்னர்,அவரே குடாநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற் பட்டிருக்கிறது. சிறுத்தீவுத் தாக்குதலைப் போன்று புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத் தலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலை ஏற்பட்டமைக்கு சிறுத்தீவில் கடந்த 29ஆம் திகதி புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலும் காரணமாக இருக்கலாம். ஆனால், இது மட் டுமே படைத்தரப்பின் பதற்றத்துக்குக் காரண மல்ல. சிறுத்தீவுத் தாக்குதல் நடந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில்தான் புதிய பாது காப்பு இறுக்கங்களை படைத்தலைமை அமுல் படுத்தியிருக்கிறது.

குடாக்கடலில் மீன்பிடிக் கும் மீனவர்களிடம் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் தென்கரையூடாக தாக்குதலை நடத்தி குடாநாட்டுக்குள் பிரவேசிக்கப்போவ தாக புலிகள் தெரிவித்ததாக, பரவிய செய் தியே இந்தப் பாதுகாப்பு இறுக்கத்துக்குக் கார ணம் என்று யாழ். படைத் தளபதி தெரிவித் திருக்கிறார். இதுவும் கூட நடைமுறைக்குப் பொருத்தமான காரணமாகத் தெரியவில்லை.

புலிகள் எப்போதுமே குறித்த நாளில் தாக்கு தல் நடத்தப் போவதாக அறிவித்து விட்டு தாக் குதலைத் தொடுத்ததில்லை. இது படைத்தரப் புக்கு நன்கு தெரியும். வலுவான புலனாய்வு அமைப்புகளை வைத்திருப்பதாகக் கூறும் அரசபடைகள் இப்படி ஒரு வதந்தியை நம்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கத் தீர்மானித்த தாக சொல்வதை நம்ப முடியாதிருக்கிறது.

புலிகளால் ஊடுருவ முடியாதபடி இறுக்க மான பாதுகாப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய படைத்தரப்பு, சிறுத்தீவுத் தாக்குதலை அடுத்து தமது பாதுகாப்பு இறுக்கத்தின் பல வீனத்தைப் புரிந்து கொண்டிருக்கலாம்.

ஆயி னும் இந்தச் சிறிய தாக்குதலை அடுத்துப் படைத்தரப்பு மிகப் பெருமெடுப்பிலான முறி யடிப்புத் தாக்குதல் ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதை அவதானிக்கின்றபோது பாதுகாப்புத் தலைமை இது குறித்து அதிக கவலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

புலிகள் பலமிழந்து போய்விட்டதாகவும் கடைசியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடந்த தாக்குதலில் 500 வரையான புலிகளை கொன் றும் காயப்படுத்தியும் களத்தில் இருந்து அகற்றிவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்திருந் தது.


இந்தநிலையில் படைத்தரப்பு கணிப்புப் படி வடபோர்அரங்கில் புலிகளின் பலம் நிச்யம் குறைந்திருக்க வேண்டும். பெருமளவில் பலம் குறைந் திருக்கும் புலிகளால் எப்படித் தாக்குதல் நடத்த முடி யும் என்று படைத் தலைமை இந்த வதந்திகளை ஒதுக்கித் தள்ளா மல், படைகளை உஷார்படுத்தியிருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மர்மம் தான் என்ன கேள்வி எழுகிறது?


யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார்.


கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ். படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித்திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.


தற்போது மேலதிக மாக 2.30 மணிநேரம் அதிகமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ். கடல்நீரேரியில் ஒரு வார காலத்துக்கு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட் டிருக்கிறது. படையினரின் வாகனத் தொடரணி கள் செல்லும் போது வெளிநாட்டு, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும், நபரும் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமன்றி கடந்த வார நடுப்பகுதியில் இருந்து யாழ்.நகரிலும் குடாநாட்டின் முக்கிய இடங்களிலும் படையினர் அதிகளவில் நிறுத் தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடாநாட்டின் தென்புற கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பெருமளவில் படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.


மேலதிக படையினருடன் தென்கரையோரப் பகுதிகளுக்கு கனரக பீரங்கிகள், மோட்டார் கள், டாங்கிகளும் நகர்த்தப்பட்டிருக்கின்றன. யாழ்.படைத்தளபதியின் இந்த அறிவிப்பும், திடீரென அதிகரிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப் பும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றத்தையும் பீதியையும் உருவாக்கியிருக் கின்றன.

கடந்த வாரத்தில் தென்மராட்சிப் பகுதியில் தாழப்பறந்து வட்டமிட்டு, புலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு அருகே "கிபிர்' விமானங்கள் தொடர்ந்து நடத்திய குண்டுத் தாக்குதல்கள், பூநகரிப் பிரதேசத்தின் மீது நடத் தப்படும் இரவு பகல் பாராத விமானம் மற்றும் ஷெல் தாக் குதல்கள் என்பன குடாநாட்டை போர்ப் பீதிக்குள் சிக்க வைத்திருக்கின்றன.

தென்கரையோரப் பகுதி ஊடாக யாழ். குடா நாட்டுக்குள் நுழையப்போவதாக புலிகள் எச்சக்கை விடுத்துள்ளதாக ஒரு செய்தி பரவி யுள் ளதையடுத்தே இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு களை படையினர் மேற்கொள்வதாக யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல் சந்திரசிறி தெரிவித்திருக்கிறார்.


"விடுதலைப் புலிகளால் குடாநாட்டின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யாழ். நகருக்கு அண் மையில் உள்ள சிறுத்தீவில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ள னர். அவர்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது என்பதாலேயே குடா நாட்டின் பாதுகாப்பை இறுக்கத் திட்டமிட்டி ருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.


கடந்த மாதம் 18ஆம் திகதி வெளியான ஆங்கில பத்திரிகையொன்றுக்கு யாழ்.படைக ளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி அளித்த பேட்டியில், "குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. படையினர் உயர்ந்த பட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்ப தோடு புலிகளின் ஊடுருவலையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


குடாநாடு எப்போதுமே புலி களின் முக்கிய இலக்காக இருக்கிறது. அதனால் அவர்கள் குடாநாட் டுக்குள் ஊடுருவ முயற் சித்துக் கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கு கடினமானது. ஏனெனில், இறுக்கமான பாதுகாப்பு நடை முறையில் உள் ளது' என்று தெரிவித் திருந்தார்.


எனினும் ஒரு மாதத்துக்குப் பின்னர்,அவரே குடாநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற் பட்டிருக்கிறது. சிறுத்தீவுத் தாக்குதலைப் போன்று புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத் தலாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்தநிலை ஏற்பட்டமைக்கு சிறுத்தீவில் கடந்த 29ஆம் திகதி புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலும் காரணமாக இருக்கலாம்.


ஆனால், இது மட் டுமே படைத்தரப்பின் பதற்றத்துக்குக் காரண மல்ல. சிறுத்தீவுத் தாக்குதல் நடந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில்தான் புதிய பாது காப்பு இறுக்கங்களை படைத்தலைமை அமுல் படுத்தியிருக்கிறது. குடாக்கடலில் மீன்பிடிக் கும் மீனவர்களிடம் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் தென்கரையூடாக தாக்குதலை நடத்தி குடாநாட்டுக்குள் பிரவேசிக்கப்போவ தாக புலிகள் தெரிவித்ததாக, பரவிய செய் தியே இந்தப் பாதுகாப்பு இறுக்கத்துக்குக் கார ணம் என்று யாழ். படைத் தளபதி தெரிவித் திருக்கிறார்.


இதுவும் கூட நடைமுறைக்குப் பொருத்தமான காரணமாகத் தெரியவில்லை. புலிகள் எப்போதுமே குறித்த நாளில் தாக்கு தல் நடத்தப் போவதாக அறிவித்து விட்டு தாக் குதலைத் தொடுத்ததில்லை. இது படைத்தரப் புக்கு நன்கு தெரியும்.


வலுவான புலனாய்வு அமைப்புகளை வைத்திருப்பதாகக் கூறும் அரசபடைகள் இப்படி ஒரு வதந்தியை நம்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கத் தீர்மானித்த தாக சொல்வதை நம்ப முடியாதிருக்கிறது.

புலிகளால் ஊடுருவ முடியாதபடி இறுக்க மான பாதுகாப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய படைத்தரப்பு, சிறுத்தீவுத் தாக்குதலை அடுத்து தமது பாதுகாப்பு இறுக்கத்தின் பல வீனத்தைப் புரிந்து கொண்டிருக்கலாம்.


ஆயி னும் இந்தச் சிறிய தாக்குதலை அடுத்துப் படைத்தரப்பு மிகப் பெருமெடுப்பிலான முறி யடிப்புத் தாக்குதல் ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதை அவதானிக்கின்றபோது பாதுகாப்புத் தலைமை இது குறித்து அதிக கவலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.


புலிகள் பலமிழந்து போய்விட்டதாகவும் கடைசியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடந்த தாக்குதலில் 500 வரையான புலிகளை கொன் றும் காயப்படுத்தியும் களத்தில் இருந்து அகற்றிவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்திருந் தது. இந்தநிலையில் படைத்தரப்பு கணிப்புப் படி வடபோர்அரங்கில் புலிகளின் பலம் நிச்யம் குறைந்திருக்க வேண்டும்.

பெருமளவில் பலம் குறைந் திருக்கும் புலிகளால் எப்படித் தாக்குதல் நடத்த முடியும் என்று படைத் தலைமை இந்த வதந்திகளை ஒதுக்கித் தள்ளா மல், படைகளை உஷார்படுத்தியிருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மர்மம் தான் என்ன கேள்வி எழுகிறது?

No comments: