Saturday 14 June 2008

மாகாண சபைத் தேர்தல் செலவுகளுக்காக 400 மில்லியன் ரூபா அபகரிப்பு!!!

  • UNNECESSARY EARLY ELECTIONS
  • GOVT RAISES LOAN TO PAY FOR POLL

வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த 40 கோடி ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து கொடுப்பனவுகள், கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான ஊதியம், எரிபொருள் கொடுப்பனவு உட்பட அனைத்து செலவினங்களுக்காகவும் இந்த பணம் செலவிடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 20 கோடி ரூபா செலவானதுடன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு 6 கோடி ரூபா செலவானதாகவும் தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளது

இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக குவைஉh சுயவiபௌ எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இது குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறோம். இது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது" என அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் மெக்கோமார்க் தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் வட்டி அதிகரிப்பினால் இலங்கையின் நாணயத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் படி, 2007ஆம் ஆண்டிற்கான கடன் நிலுவை 2.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விடயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே என மத்திய வங்கியின் தலைமைப் பொருளியலாளரான நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: