Saturday 14 June 2008

பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பொலீஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் வெலிகேபொல பொலீஸ் பிரிவில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வெலிகேபொல பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய கல்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஓமரா கமகே சனத் வயது 39 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடமையிலிருந்த போதே துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: