இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் ஓரே மேடையில் உராயற்றவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
நாட்டின் 18 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்கள் இன்றைய மாநாட்டில் கலந்து உள்ளதாக மக்கள் பிரிவின் செயலாளரும், தேசிய அமைப்பாளருமான டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
Thursday 12 June 2008
ஸ்ரீ.சு.க.(ம) பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாட்டில் சந்திரிக்கா, ரணில், மங்கள ஓரே மேடையில் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment