Saturday 14 June 2008

சி.சு.க அமைச்சர்கள் சிலர் பதவி விலகத் தீர்மானம்?

maithripala-srisena.jpgஅமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்து, சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், எரிபொருள் பாவனைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செலயாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் குறித்து அரசாங்கத்திற்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் இது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் இராஜினாமா குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: