சல்லடை போட்டு தேடுதல் நடாத்திய காவற்துறையினர் பொதுமக்கள் மீது வயது வேறுபாடு இன்றி மிகக் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டதாகவும் தெரியவருகின்றது. மேலும் இத் தேடுதலில் கூலிப்டையான கிழக்கு முதலமைச்சரின் ஆயுதக் குழுவும் சிங்களக் காட்டுப்படைகளுடன் இணைந்து மக்களை அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது.

கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வேரோடு அழிக்கும் வரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என கூலிப்படையின் தற்போதைய ஆயுததாரி முதலமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். எத்தனையாவது திருமணத்தினை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரியாமல் கூலிப்படைக் கும்பல் குழம்பியுள்ளதாகவும் கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.