Monday 18 August 2008

நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி்; 20 பேர் படுகாயம்

முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆட்லெறி மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் நாச்சிக்குடாப் பகுதி ஊடாகவும் அதனை அண்டிய பகுதிகள் ஊடாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர்.

இதில் பத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இருபதுக்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர்.

கொல்லப்பட்ட படையினரின் உடலங்கள் மற்றும் படைப் பொருட்கள் நடுநிலைப் பகுதியில் (சூனியப் பிரதேசம்) சிதறிக் காணப்படுகின்றன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: