அரசாங்கம் புலிகளுக்கு எதிரான யுத்தமென்று அரசாங்கம் கூறினாலும் உண்மையில் இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய நேர்காண லில் குறிப்பிட்டார். அவரது பேட்டியின் முழு விபரம் வருமாறு:
கேள்வி: இந்திய பிரதமர் இலங்கை வந்திருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக கூட்டமைப்பு அவருடன் தொடர்பு கொண்டதா? கூட்டமைப்பினர் இந்தியா செல்வதன் நோக்கம் என்ன? யார் யார் எப்போது இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளீர்கள்?
பதில்: இந்திய பயணம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக் கின்றன. அநேகமாக அடுத்தமாத நடுப்பகுதியில் இந்தியா செல்வதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளோம். இந்தியா செல்லும் குழுவில் யார் யார் இடம்பெறுகிறார்கள் என்பது இதுவரையில் தீர்மானிக்கவில்லை.
ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கியமானவர்கள் செல்லலாம். ஏற்கனவே சார்க் மாநாட்டின் போது இந்திய பிரதமர் எமக்கு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து இந்திய தூதுவருடன் பேசியுள் ளோம். எனவே இந்திய விஜயம் நிச்சயம் இடம்பெறும். இந்திய விஜயத்தின் நோக்கம் இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே. இலங்கை அரசாங்கம் இன்றுவரை முற்று முழுதாக யுத்தத்தால் தமிழ் மக்களை வெற்றி கொள்வதன் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற நிலைப்பாட் டிலேயே செயற்படுகிறது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் இது புலிகளுக்கு எதிரான யுத்தமென்று கூறினாலும் கூட உண்மையாக இன்று தமிழர்களுக்கு எதிராகவே இந்த யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த யுத்தத்தால் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் நடத்துகிறோம், தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல என பொய்யான கருத்துக்களை கூறி வருகிறது.
இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தன்னுடைய குடி மக்கள் மீது யுத்தத்தை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான மக்களை கொலை செய்ததுடன் இலட்சக்கணக்கான மக்களை தொடர்ந்தும் அகதிகளாக்கியுள்ளது.
எனவே அரசாங்கம் மக்கள் மீது இவ்வாறான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிற போது நிச்சயமாக அதனை நிறுத்துவதற்கு ஏனைய நாடுகளிடம் உதவி கேட்பதில் எந்த விதமான தவறும் இல்லை.
எனவே இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கான முழுமையான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் ஏனைய நாடுகள் இதற்கு உதவி செய்ய வேண்டும்.சர்வதேச சட்டங்களின் பிரகாரம் ஐக்கிய நாடுகளின் சாசனங்களின் பிரகாரம், எந்த ஒரு இனத்தையும் அழிக்கும் உரிமை எந்த ஒரு அரசிற்கும் இல்லை . எனவே இதன் அடிப்படையில் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சர்வதேச சமூகத்திற்கு உள்ளது.
எனவே, இவ்விடயம் தொடர்பாக தெளிவாக பேசுவதற்காகவே நாங்கள் இந்திய பயணத்தை ?ன்öனடுக்க உள்ளோம்.
கேள்வி: தற்போது யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இம்மக்களின் நிலையினை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல எவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது?
பதில்: ஏற்கனவே கொழும்பில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் தூதுவரõலயத்துடன் இது தொடர்பாக பேசி இருக்கின்றோம். வெளிநாடுகளின் தூதுவர்களிடம் இது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக உலக நாடுகளுக்கு இலங்கை யுத்தத்தால் மிக மோச மான இடப்பெயர்வுகள் இடம்பெற்றுள்மை நன்கு தெரியும். இது தவிர, சாப்பிட வழி இல்லாமலும் தங்க இடம் இல்லாமலும் மக்கள் மர நிழல்களில் தஞ்சம் புகுந்துமுள்ளனர். குறுகிய காலப்பகுதிக்குள் பாரிய இடப்பெயர்வு இடம்பெற்றுள்ளது.
மன்னார் பெருநில பரப்பில் மக்கள் முழுமையாக விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், வவுனியா பெருநிலப்பரப்பில் இருந்தும் இராணுவத்தினரால் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பா?யளவில் மிக பாரதூரமான அளவில் இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன.
வன்னிப் பரப்பென்பது பாரிய கட்டிடங்களை கொண்ட இடமல்ல. சிறிய குடிசைகளும் வீடுகளுமே பெருமளவில் உள்ளன. இந்நிலையில் மக்களை தங்கவைப்பதற்கு இடவசதிகள் அங்கு இல்லை. எனவே சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இலங்கை அரசாங்கமுமே அவர்கள் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அம்மக்களுக் கான தங்குமிட வசதிகள் இதுவரையில் கிடைக்கவில்லை. காரணம் வன்னி நிலப்பரப்பிற்கு செல்லும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கொண்டு செல்லும் பொருட்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் முறிகண்டி தொடக்கம் கிளிநொச்சி வரையான வீதியில் மக்கள் இரு மருங்கிலும் தங்க வசதியின்றி மரநிழலிலேயே தங்கும் நிலைமை தொடர்கிறது.
எனவே இது தொடர்பாக சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் தூதுவராலயத்திடமும் தெரிவித்துள்ளோம். நிச்சயமாக இவ்வாறான நிலைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுமானால், முதலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இன்று இலங்கை அரசாங்கம் இடம்பெயர்வு பற்றியோ மக்கள் அகதிகளாக்கப்பட்டது பற்றியோ எந்த ஒரு அக்கறையும் இல்லாத நிலையில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. இன்னும் கூறப் போனால், இலங்கை அரசாங்கம் மிக மோசமான பொய்களையும் கூறுகின்றது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் அம்மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாக இரு க்கின்றார்கள் என்றும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக பொய்களை கூறிவரு கிறது. ஆனால், உண்மையிலேயே ஒரு நாட்டின் குடி மக்களை மிக மோசமாக விரட்டி அடிக்கும் நடவடிக்கை இந்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருகின்றது.
ஒரு புறம் மக்களை விரட்டி அடித்துக் கொண்டு, இன்னுமொரு புறம் அம்மக்கள் எல்லோரும் சுகபோகமாக வாழ்கின்றனர் என்பது போல இலங்கை அரசாங்கம் வெளி உலகத்திற்கு காட்ட முயற்சி செய்கிறது. நிச்சயமாக அம்மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. அம்மக்கள் வறுமை என்ற எல்லைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக் கின்ற நிலையில் மீண்டும் மீண்டும் அவர்கள் தாக்கப்படுகின்றனர்.
வன்னி பகுதியில் மீன்பிடிப்பதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுதவிர விவசாயத்தை முன்னெடுப்பதற்கு உரமோ மருந்து வøககளோ கொண்டு செல்வதற்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை.
எனவே அவர்கள் எல்லாவகையிலும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் மக்களை எதுவித வசதிகளுமற்ற நிலையில் நடுத் தெருவிற்கு கொண்டுவந்துள்ளது.
இம்மக்களின் அவலத்தை பார்த்து விடுதலைப் புலிகள் கூட நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம் யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கூட கேட்டனர். இது தொடர்பாக உலக நாடுகள் கூட பல தடவைகள் இலங்கை அரசாங்கத் திடம் யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழுத்தத்தை கொடுத்துள்ளன. ஆனால், இலங்கை அரசாங்கத்தின் முடிவு முற்று முழுதாக இந்த யுத்தத்தை நடத்தி முடிப்பதே.
ஏற்கனவே கடந்த 25 வருடமாக நடந்த யுத்தத்தில் பத்து இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வெளிநாட்டிற்கு அகதிகளாக சென்று விட்டனர். எனவே, இலங்கை அரசாங்கத்தால் மக்கள் விரட்டப்பட்டுள்ளனர்.
அதேபோலவே இன்னும் தொடர்ச்சியாக இந்த விடயம் நடந்து வருகின்றது.
கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 2 இலட்சம் மக்கள் அகதியாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரையில் முழுமையாக குடியேற்றப்படவில்லை. மூதூரில் 22 கிராமத்தை சேர்ந்த மக்கள் குடியேற்றப்பட நிலையில் தற்போது வடக்கு பகுதியில் உள்ள மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இவ்விடயங்கள் அனைத்தையும் மிக தெளிவாக சர்வதேச சமூகத்திடம் சொல்லி இருக்கிறோம். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நிச்சயமாக இந்திய அரசிற்கு இந்த விடயங்கள் பற்றி தெரியும். நாங்கள் இது தொடர்பாக இந்திய அரசுடனும் எதிர்க்கட்சி மற்றும் ஏனைய தலைமைக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
கேள்வி: வன்னியில் மக்கள் அகதிகளாக மர நிழல்களில் தங்கி இருப்பதாக கூறப்படுவது பொய் என அரசாங்கம் கூறுகின்றதே.
இது பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: இந்த அரசாங்கம் இதுவரையில் உண்மை பேசி இருக்கிறது என நம்புவதற்கு யாரும் தயாராக இல்லாத நிலையில், யுத்தம் தொடர்பான செய்திகள் பற்றி பார்ப்போமானால் மக்களுக்கு கூறப்படும் ஒரே ஒரு விடயம் "நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுக்கொண்டுள்ளோம். நாங்கள் வாகரையை பிடித்து விட்டோம். கிளிநொச்சிவரை சென்றுள்ளோம்' என்பவையே. யுத்தத்தில் எத்தனை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பன சிங்கள மக்களுக்கு கூறப்படவில்லை. சிங்கள மக்களுக்கு இனவெறி ஊட்டப்பட்டுள்ளது.
தமிழர்களை கொல்வதன் மூலம் தாங்கள் துட்டகைமுனுவின் வாரிசுகளாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். எனவே, சிங்கள மக்களும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். உண்மையில் இந்த நாட்டில் இருக்கும் மக்களில் சிங்கள மக்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். அதனை தமிழ் மக்களும் பெற்றுக் கொள்ளும் போதே இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என மக்கள் எண்ணுவதாக இல்லை. அல்லது மக்களை யோசிப்பதற்கு அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் விடுவதாய் இல்லை. அது இடதுசாரி பேசக்கூடிய ஜே.வி.பி.யாகவும் இருக்கலாம்.
மிக மோசமாக இனவாதத்தை பேசக்கூடிய சில பௌத்த பிக்குகளாகவும் இருக்கலாம்.
இதுதவிர ஐக்கிய தேசியக் கட்சியாகவும் இருக்கலாம். இந்நிலையில் இலங்கையை ஆள விரும்புகின்ற, எல்லா கட்சிகளுக்கும் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களை அழிப்பதன் ஊடாகவும் தமிழ் விரோத கருத்துக்களை கொண்டுவருவதன் மூலமாகவும் தான் அரசாட்சியை கைப்பற்ற முடியும் என்றதொரு துர்ப்பாக்கிய நிலை ஆண்டாண்டு காலமாக இலங்கையில் நிலவி வருகின்றது.
இன்று மஹிந்த சமரசிங்க சொல்கிறார் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் சென்று கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை என. ஆனால், இவர் நேரே சென்று பார்த்தால் எத்தனை ஆயிரம் மக்கள் தங்க இடமின்றி மரநிழலில் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு கூறுவதற்கு பல கருத்துக்களை வைத்துள்ளனர். இவர்கள் எத்தனைமுறை அங்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்று கூறினாலும் அங்கு இருக்கக்கூடிய சர்வதேச நிறுவனங்களுக்கு உண்மையில் அங்கு என்ன நடைபெறுகிறது என்பது தெரியும்.
கேள்வி: வன்னியில் உணவு போதிய கையிருப்பில் இருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பதாகவும் மக்களின் நலன் கருதி தினம் 20 லொறிகளில் வன்னிக்கு உணவு அனுப்பி வைப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இதன் உண்மை தன்மை பற்றி விளக்கமுடியுமா?
பதில்: முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மக்கள் வாழ்கின்ற நிலையில் 20 லொறிகள் தான் போகின்றது என்றால், அந்த பொருட்கள் எவ்வளவு காலத்திற்கு போதும் என்னென்ன பொருட்கள் போகின்றன என்பது கேள்வி குறியே.
முக்கியமாக அம்மக்களுக்கு தங்குவதற்குக் கூடாரம் வேண்டும். உணவு வேண்டும். குழந்தைகளுக்கு பால்மா வேண்டும். நான் அறிந்த வகையில் அங்கு குழந்தைகளுக்கு எந்த வகையான பால்மாவும் இல்லை. அரிசியையும் பருப்பையும் மட்டும் கொண்டு செல்ல அனுமதியை வழங்கிவிட்டு
"நாம் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டோம். 20 லொறிகளில் பொருட்கள் அனுப்புகிறோம் ' என கூறி கொள்வதில் எந்த உண்மையும் இல்லை. பொதுவாக அங்கு குழந்தைகளுக்கான பால் மா இல்லாத பிரச்சினை இருக்கிறது. மக்களது உயிர் காக்கும் மருந்து இல்லாத பிரச்சினை இருக்கிறது. இதுவரை முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் உள்ள வைத்தியசாலைக்கு மின்சாரம் இல்லாத பிரச்சினை உள்ளது. இதனால், கையிருப்பில் உள்ள மருந்துகளை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.
ஆகவே, பிரச்சினைகள் என்று பார்த்தால் அங்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், அரசாங்க அதிபர் இல்லை என்றே பதிலளிக்கிறார். காரணம் அரசாங்க அதிபர் என்பவர் ஒரு அரசாங்க ஊழியர்.
அவர் அரசாங்கம் சொல்வதையே கூறுவார்.
இந்நிலையில் அவர் தமிழர்களுக்காக பேசுவார் என எதிர்பார்க்க முடியாது. அவர் அரசாங்கத்தை எதிர்த்து தமிழர்களுக்காக பேசுவாரானால் அவருடைய பதவி பறிக்கப்படும்.
எனவே அரசாங்கம் கூறுவதையே அரசாங்க அதிபர் கூறுவார். 20 லொறிகள் போனது உண்மைதான். ஆனால், அந்த ö லாறியில் அம்மக்களுக்கான முக்கியமான உணவுகள், மருந்துகள் குழந்தைகளுக்கான பால் மா என ஏற்று கொள்ள முடியாது.
காரணம் இவற்றுக்கான தட்டுப்பாடு தற்போதும் அங்கு நிலவுகின்றது. இதுதவிர அப்பகுதிகளில் நாளாந்தம் ஷெல் தாக்குதல் நடைபெறுகிறது. இவற்றின் மூலம் பாதிக்கப்படுபவர்கள் புலிகளோ புலிகளின் உறுப்பினர்களோ அல்ல. இவற்றில் அதிகளவில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே. எனவே இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளை கூட கொண்டு செல்வதற்காக அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதேவளை மக்களுக்கு தேவையான மருந்துகள் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டும் வவுனியாவில் அனுமதிக்கப்பட்டாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்த்துள்ளோம். வாகரையில் தொடர்ச்சியாக குண்டு வீசி அம்மக்களை தாக்கி அவர்களுக்கு உணவு அனுப்பாமல் அவர்களை இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குö காண்டு வர வேண்டும் என்ற நோக்கில் 300க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கையினை நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். மக்களை மிக மோசமான முறையில் அங்கிருந்து விரட்டி விட்டு நாங்கள் வாகரையை பிடித்து விட்டோம் என கூறியது. அதேபோன்ற செயற்பாடே இன்று இங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
மக்களின் மீது மோசமானதும் மோசடித்தனமான தாக்குதலை நடத்துகின்ற நடவடிக்கைகளையே இன்று இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. எனவே, இந்த அரசாங்கம் கூறுவதிலோ அரசாங்க அதிபர்கள் கூறுவதிலோ எந்த உண்மையும் இல்லை.
கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த சில சக்திகள் முயல்வதாக ஸ்ரீகாந்தா எம்.பி. அண்மையில் குற்றம் சாட்டியுள்ளார். அந்த சக்தி என்ன? இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கூற முடியுமா?
பதில்: இதுவரையில் எனது அறிவுக்கு எட்டிய வகையில் எனக்கு கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தமிழ் கூட்டமைப்பில் ஒரு பிளவு வரும் என நான் கருதவில்லை.
சில வேளைகளில் ஸ்ரீகாந்தாவிற்கு யாராவது இடையூறு விளைவிப்பது அவருக்கு தெரிந்திருக்கலாம். இல்லை என நான் கூறமாட்டேன்.
ஆனால், என்னை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய உரிமைகளை, தமிழ் மக்களினுடைய அபிலாஷகளை ஏற்றுக்கொள்ளக்கூடியது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் நிச்சயமாக அவர்களுடைய கூட்டு என்பது பாதுகாக்கப்படும். அவர்கள் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும்.
Saturday 23 August 2008
தமிழ் மக்களை காக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசத்திற்கு உண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment