ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திலக் தாப்ரூ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள ஜோன்சன் கோலின் வெலன்டினோ எலியஸ் வசந்தன் என்பவருக்கே இன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரி மகேஸ்வரன் மற்றும் சந்திரகுமார் மகிந்தன் ஆகியோரை கொலை செய்ததன் மூலம் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த நபர் கொலை குற்றவாளியாக காணப்படுவதாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சந்தேக நபர் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளினால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை நீதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Tuesday 19 August 2008
மகேஸ்வரன் - கொலைச் சந்தேக நபரிடம் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment