வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயிருப்பதாக காணாமல் போனவரின் தாயார் செட்டிக்குளம் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். தில்லையம்பலம் தில்லைராசா என்பவரே காணாமல் போயுள்ளார்.
செட்டிக்குளம் பிரதேச கூட்டுறவுச் சங்க விவகாரமாக வீட்டில் இருந்து சென்ற அவர் வீடு திரும்பவில்லை என அவரது தாய் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.தனது மகன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது,
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதவர்களினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தனது மகனுக்கு எந்த அரசியல் அமைப்புகளிடனோ, இயக்கங்களுடனோ தொடர்பில்லை என தாயார் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
Monday 18 August 2008
செட்டிக்குளத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment