Thursday 21 August 2008

கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் சுட்டுக் கொலை

கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவரான 27 வயதுடைய எம்.பி.எஸ் சமரசிங்க இன்றிரவு ஒன்பது மணியளவில் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இவர் குருநாகல் பொத்துஹர என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மாணவராவார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவி ஒருவர் ராக்கிங் செய்யப்பட்ட சம்பவத்துடன் இப்படுகொலைக்குத் தொடர்புள்ளதா என காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓகஸ்ட் 19ஆம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கலாசாரப்பிரிவினரால் ஒரு எச்சரிக்கைத் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதில் பெண்களுக்கெதிரானதும் கலாசாரத்திற்கு எதிரானதுமான இழிவான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நவடிக்கை தம்மால் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கொல்லப்பட்ட மாணவன் கடந்த மூன்று வருடங்களாக 16 சிங்கள மாணவர்களுடன் கற்கையில் ஈடுபட்டு வருபவர் என்று பல்கலைக்கழக வட்டாரம் தெரிவிக்கிறது.

2007 -2008 ஆம் ஆண்டுகளில் 181 சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: