Saturday 23 August 2008

பல்லியாகொடல்லவில்; முஸ்லிம் வாக்காளர்கள் விரட்டியடிப்பு

tmvplogo1.jpgபொலன்னறுவை பல்லியாகொடல்லவில் வாக்களிக்கச் சென்ற முஸ்லிம் வாக்காளர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுததாரிகள் விரட்டியடித்ததாக முறையிடப்பட்டுள்ளது.


பெரும் எண்ணக்கையிலான முஸ்லிம் வாக்காளர்கள் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அடையாள அட்டைகளை சமர்ப்பிக்காத பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பல மாவட்டங்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையகம் வெளியிட்ட தகவல்களை பொதுமக்கள் சரியாக புரிந்துகொள்ளாமையினால் இந்த நிலை உருவாகியுள்ளது.

அடையாள அட்டைக்குப் பதிலாக எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியும் என பொதுமக்கள் கருதியதனால் இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆள் அடையாளத்தை உரிய வகையில் நிரூபிக்க முடியாத பல வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments: