Saturday 16 August 2008

பாரிய நட்டத்தை அடைந்த மிஹின் எயாரை மீண்டும் இயக்க முயற்சி

பாரிய நட்டங்களுக்கு உள்ளாகித் தமது சேவையை நிறுத்திக்கொண்ட மிஹின் எயார் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக “மக நெகும” என்ற திட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் புதியவர் ஒருவரை இந்தச் சேவைக்குப் பணிப்பாளராக நியமிக்கவுள்ள ஜனாதிபதி அவரை மேலும் 400 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் அரசாங்க நிதியில் இயங்கிய மிஹின் எயார் விமான சேவை சுமார் 2 பில்லியன் ரூபாய்கள் வரையில் நட்டமடைந்தததுடன் அந்தச் சேவையில் இணைக்கப்படடிருந்த பல விமானங்களும் வாடகை விமான நிறுவனங்களால் பலாத்காரமாக எடுத்துச் செல்லப்பட்டன

No comments: