Monday 18 August 2008

மணலாற்றில் மின்னல்தாக்கி நான்கு இராணுவத்தினர் பலி, இருவர் காயம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை மணலாறு, ஆந்தான்குளம் பகுதியில் மின்னதாக்குதல் காரணமாக இராணுவத்தினர் நால்வர் பலியாகியுள்ளதுடன்,


மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வேளையில் உளவு இயந்திரம் ஒன்றில் அந்தான்குளம் பகுதி ஊடாக இராணுவத்தினர் பயணித்தக்கொண்டிருந்தவேளையிலேயே இவர்களை மின்னல் தாக்கியதாகவும், இந்த மின்னல் தாக்கம் காரணமாக நான்கு இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் மரணமடைந்ததாகவும்,


இதில் காயமடைந்த இராணுவத்தினர் இருவர் அவசரமாக அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: