Friday 22 August 2008

இலங்கை அரிசிக் கப்பல் விபத்தில் சிக்கி மூழ்கியது!

இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி அரிசியை ஏற்றிக்கொண்டு வந்த இலங்கைக் கப்பல் ஒன்று பங்களாதேஸ் சிட்டகொங் துறைமுகத்திற்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா என்பவருக்குச் சொந்தமான எம்.வி. பதுலுவலி எனும் கப்பலே 3000 தொன் அசிரியுடன் சிட்டகொங் துறைமுகத்திற்குள் நுழைந்தவேளை எதிரே வந்துகொண்டிருந்த பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலொன்றுடன் மோதி மூழ்கியுள்ளது.

இதன்போது கப்பலில் இருந்த 17 பேரில் தலைமைப் பொறியியளாளர் தவிர ஏனைய அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஸ் துறைமுக அதிகாரிகளும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது

No comments: