Wednesday 20 August 2008

அரசாங்கம் புண்ணாக்கு சாப்பிடுகிறது அதனால் நாமும் சாப்பிடுகிறோம்-விமல் வீரவன்ஸ

வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நிலைமைக்கு உட்பட்ட நாடாக மேற்குலக நாடுகள் இலங்கையை பட்டியலிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவெனவும் கூத்தாட வேண்டிய சந்தர்ப்பம் இது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். பணிப்புறக்கணிப்புகள், அரசாங்கம் நடத்தும் தேர்தல்கள் என்பன இந்த பிரச்சினைகளை திசைத்திருப்பும் செயற்பாடுகள்.


அரசாங்கம் இந்த மூடத்தனமான வேலையை செய்யும் போது, ஏனையோரும் இந்த மூடத்தனமான வேலையை செய்ய தமக்கு உரிமை இருப்பதாக கூறுகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். ‘


யுத்தம் என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தமால் இருக்காலம்தானே, அரசாங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிந்தால் எமக்கு ஏன் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள முடியாது என சகோதரர் லால்காந்த கேள்வி எழுப்பியிருந்தார். அரசாங்கம் புண்ணாக்கு சாப்பிடுகிறது அதனால் நாமும் சாப்பிடுகிறோம்,

அரசாங்கத்திற்கு புண்ணாக்கு சாப்பிட முடிந்தால் ஏன் எங்களுக்கு சாப்பிட முடியாது என்றுதானே லால்காந்த கேட்கிறார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

No comments: