Wednesday 20 August 2008

பிரச்சாரக் கூட்டத்திற்கு மக்கள் வராததல் காத்திருந்தார் இலங்கை பிரதமர்

தம்புத்தேகம ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு மக்கள் சமூகமளிக்காத நிலையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மக்களுக்காக காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள தம்புத்தேகம பிரதேசத்தில் நேற்று முற்பகல் 10.30க்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்திற்காக மாகாணம் முழுவதும் கட்அவுட்கள், பிரசார சுவரொட்டிகள் என தடல்புடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டம் 10.30க்கு ஆரம்பமாக விருந்த போதிலும் மக்கள் கூட்டம் இல்லாத நிலையில் மதியம் 12.30 மணிக்கே கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் சுமார் 150 பேரே கூட்டத்தில் கலந்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது. கூட்டத்தில் உரையாற்றவிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மக்கள் கூடும் வரை அருகில் உள்ள இடம் ஒன்றில் காத்திருந்திருந்ததாகவும் மக்களை அழைத்து வரும் பணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும், அமைப்பாளர்களும் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.


இதேவேளை தம்புத்தேகம பிரதேசத்தில் ஜே.வீ.பீயினர் நடத்திய கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாகவும் இந்த கூட்டத்தை குழப்புவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு மக்கள் வராத நிலையில் தொடர்ந்தும் மக்களை அழைத்துவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையில் மக்கள் கூட்டத்திற்கு சமூகமளிக்காததால் அதனை ஒளிப்பதிவுசெய்ய ஊடகவியலாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் அனுமதி வழங்கவில்லை.

No comments: