Thursday 21 August 2008

வவுணதீவில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இளைஞர் படுகொலை

இனந்தெரியாத ஆயுததாரிகள் ஐவர் தமிழ் இளைஞர் ஒருவரை பலவந்தமாகத் தூக்கிச் சென்று படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த சீருடையையே ஆயுததாரிகள் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்டவர் 48 வயதான அழகதுரை தர்மலிங்கம் என்ற விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். கொல்லப்பட்டவரின் கையிலிருந்த இரண்டு பவுண் பெறுமதியான தங்க மோதிரத்தையும் கொலையாளிகள் அபகரித்துச் சென்றுள்ளனர்.

சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

No comments: