Wednesday 20 August 2008

மங்களம் மாஸ்டரின் வாகனம் மோதி ஊர்காவற்படைச்சிப்பாய் மரணம்

tmvplogo1.jpgவடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ரி.எம்.வி.பியின் மங்களம் மாஸ்டர் என அழைக்கப்படும் அய்யாத்துரை கதிர்காமத்தம்பி பயணித்த வாகனம் மோதியதில் ஊர்காவற்படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மங்களம் மாஸ்டர் பயணித்த ஜீப் வண்டி ஊர்காவல் படைச்சிப்பாய் சென்ற மோட்டார் சைக்களில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜீப் வண்டியின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன் வண்டியை கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: