Tuesday 19 August 2008

ஏறாவூரில் சமாதான நீதவான் மீது சூடு

pistol-unknown-man.jpgமட்டக்களப்பு ஏறாவூர் தேவாபுரம் காவற்துறைப் பிரிவில் சமாதான நீதவான் ஒருவர் சுடப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) 8.30 மணியளவில் 61 வயதுடைய சுப்ரமணியம் நாகராசா என்பவரது வீட்டிற்குச் சென்ற இனம் தெரியாதோர் இவர் மீது சரமாரியாகச் சுட்டதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடுமையான காயங்களுக்குள்ளான இவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


பத்தினி அம்மன் வீதி, தேவாபுரம், முறக்கொட்டாஞ்சேனை, ஏறாவூர் என்ற வதிவிட முகவரியைக் கொண்ட இவர் பத்தினி அம்மன் கோவில் தர்மகத்தா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: