Wednesday 20 August 2008

யாழ்ப்பாணத்தில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் 48 வயதான குட்டியன் சிவபாதம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை மாவடியில் உள்ள இவரின் வீட்டுக்கு சென்ற இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து மரண விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை நீதிமன்ற மேலதிக நீதிவான், சடலத்தை மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments: