Thursday 21 August 2008

பாகிஸ்தானில் முக்கிய ஆயுத தொழிற்சாலைக்கு அருகே இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வெகு அருகிலிருக்கும் நாட்டின் முக்கிய ஆயுத தொழிற்சாலைக்கு அருகே இடம் பெற்ற இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 63 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தானிய போலீசார் கூறுகிறார்கள். இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

வாஹ் நகரிலுள்ள இந்த ஆயுதத் தொழிற்சாலையின் முக்கிய வாயிலுக்கு எதிரே ஒரு தற்கொலை குண்டுதாரி தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொண்டார் எனவும் பாகிஸ்தானிய போலீசார் தெரிவிக்கிறார்கள்.

மற்றொரு வாயிலுக்கு அருகே இருந்த சந்தைப் பகுதியில் இரண்டாவது தற்கொலை குண்டுதாரியின் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானிலுள்ள தாலிபான்களுக்காக பேசவல்ல ஒருவர் அந்நாட்டின் பழங்ககுடிகள் வாழும் பகுதிகளில் தமக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகத்தான் இன்றைய இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்று கூறியுள்ளார்.

No comments: