Sunday 17 August 2008

கண்ணகிபுரம் பகுதியில் இராணுவமுகாம் மீது எறிகணைத் தாக்குதல்: ஒரு படையினர் பலி: நால்வர் காயம்

நேற்று இரவு 9.45 மணியளவில் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா படைகளின் இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு நிகழ்த்தியுள்ளனர்.


அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரண் ஒன்றையும் தாக்கியழித்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நால்வர் காயமடைந்தள்ளதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை நேற்று மாலை கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த இருவர் இன்று இறந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது.

No comments: